சிங்கப்பூரில் உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்து!! காரணம் என்ன?

சிங்கப்பூரில் உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்து!! காரணம் என்ன?

சிங்கப்பூரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கெய்லாங் நகரத்தில் உள்ள வியட்நாமிய உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்து ஜனவரி 10ஆம் தேதியன்று மாலை ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து மாலை 6 மணி அளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் இரண்டு வாட்டர் ஜெட் மூலம் தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்து ஏற்பட்டபோது உணவகத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள் சமையல் அறையில் இருந்ததாக கூறப்படுகிறது.

ஒருவருக்கு தீக்காயம் ஏற்பட்டதாகவும், ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மறுத்து விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அவர்கள் கூறினர்.