குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து!! 5 பேர் பலி!! பலி எண்ணிக்கை உயருமா?

குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து!! 5 பேர் பலி!! பலி எண்ணிக்கை உயருமா?

ஹாங்காங்கின் கவுலூன் மாவட்டத்தில் உள்ள ஒரு குடியிருப்புக் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவம் ஏப்ரல் 10ஆம் தேதி அன்று நடந்தது.

இந்த தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் . சுமார் 35 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.ஒருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்தது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் காலை 8.54 மணி அளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக கூறினர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.