சிங்கப்பூரில் தொடக்கப்பள்ளியில் தீ விபத்து!!

சிங்கப்பூரின் பொங்கோல் பகுதியில் உள்ள Northshore தொடக்கப்பள்ளியில் அக்டோபர் 16-ஆம் தேதி (நேற்று) இரவு தீ விபத்து ஏற்பட்டது.பள்ளியின் முதல் மாடியில் உள்ள அலுவலகத்தில் இருக்கும் மின்சாரப் பெட்டியில் தீ மூண்டதாக கருதப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு நேற்றிரவு சுமார் 8.50 மணியளவில் அழைப்பு வந்தாக Channel 8 செய்தியிடம் கூறியது.

இச்சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.தீயை அணைப்பதற்காக 2 தண்ணீர் குழாய்கள் பயன்படுத்தப்பட்டன.

தீ விபத்து ஏற்பட்டதற்கான கரணம் விசாரணை நடைபெற்று வருகிறது.