நிக்கல் உருக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து!! பலி எண்ணிக்கை உயர்வு!!

இந்தோனேசியாவில் டிசம்பர் 23ஆம் தேதி அன்று நிக்கல் உருக்கும் தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களில் 8 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த தீ விபத்தில் டஜன் கணக்கான தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தன்றே தீ அணைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதனால் ஆலையின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.