சிங்கப்பூரில் மீன் பண்ணையில் தீ விபத்து!! காரணம் என்ன?

சிங்கப்பூரில் மீன் பண்ணையில் தீ விபத்து!! காரணம் என்ன?

சிங்கப்பூரில் ஜனவரி 21ஆம் தேதி அன்று புலாவ் தெக்கோங்கிற்கு அருகில் உள்ள ஒரு மீன் பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டது.

மீன் பண்ணையில் இருந்த ஜெனரேட்டரில் இருந்து தீ பரவியதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

சம்பவ இடத்திற்கு வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் தீயை அணைத்தனர்.

கடலோரக் காவல் படையினர் மீன் பண்ணையில் இருந்த 13 பேரையும் பாதுகாப்பாக வெளியேற்றினர்.

இந்த தீ விபத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று அவர்கள் கூறினர்.

இந்த தீ விபத்து குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.