கோர விபத்தை சந்தித்து சில மாதங்களிலே மற்றுமொரு பதைபதைக்கும் சம்பவம்…..

அக்டோபர் 29ஆம் தேதி அன்று இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 25 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயில் கோளாறு காரணமாக நின்று கொண்டிருந்தது.

அப்பொழுது அங்கு வந்த விசாகப்பட்டினம்-பாலசா விரைவு ரயில், அதன் மீது மோதியதில் நின்று கொண்டிருந்த ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டது என்று ரயில்வே அதிகாரி கூறினார்.

இந்த விபத்து குறித்து அறிந்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரண உதவிகளை வழங்குமாறு உத்தரவிட்டார்.