Singapore News in Tamil

சிங்கப்பூரில் நொடிப்பு நிலைக்கு சென்ற பிரபல நிறுவனம்!

இணையத்தில் வளர்ப்புப் பிராணிகளை விற்பனை செய்யும் நிறுவனம் Perromart.அந்த நிறுவனம் புதிய உரிமையாளரிடம் விற்கப்பட்டுள்ளது.

அந்நிறுவனத்தை பற்றி கடந்த ஐந்து மாதத்தில் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்திடம் 200 க்கும் அதிகமான புகார்கள் அளிக்கப்பட்டன.

Perromart நிறுவனம் கடந்த மார்ச் மாதம் நொடிப்புநிலையில் வைக்கப்பட்டது. அது சரியான நேரத்தில் கடனைத் திருப்பி செலுத்த முடியாததால் அந்த நிலையில் வைக்கப்பட்டது.

Perromart சிங்கப்பூரில் மிகவும் பிரபலமானது. பணம் செலுத்திய பிறகும் செல்லப் பிராணிகள் வந்து சேரவில்லை அல்லது தாமதமாக வந்து சேர்கிறது என்ற புகார்கள் ஜனவரி மாதம் முதல் பெறத் தொடங்கியது.