சிங்கப்பூரில் மரக்கிளையில் மோதிய இரட்டை அடுக்கு பேருந்து!!

நவம்பர் 22ஆம் தேதி அன்று Bishan street 22 வழியாக சென்று கொண்டிருந்த சர்வீஸ் 88 டபுள் டெக்கர் பேருந்து மரக்கிளை மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து குறித்து இரவு 10.30 மணி அளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்தது.

இந்த விபத்தில் பேருந்தின் மேற்கூரை சேதமடைந்ததாகவும், பேருந்தின் மேல்தளத்தின் கண்ணாடி சாலையில் சிதறி கிடந்ததாகவும் பொதுமக்கள் கூறினர்.

இந்த விபத்தில் 54 வயதான பயணி ஒருவர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காயமடைந்த பயணியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

55 வயதான பேருந்து ஓட்டுநரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மேலும் அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் கூறினர்.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளிடம், ஏற்பட்ட சிரமத்திற்காக வருத்தம் தெரிவிப்பதாக SBS Transit-ன் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

மேலும் இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.