ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவரை பதம் பார்த்த முதலை…!!

ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவரை பதம் பார்த்த முதலை...!!

இந்தோனேசியாவில் ஆற்றில் குளிக்கச் சென்ற தாத்தா எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார்.

68 வயதான திரு யூனுஸ் தனது வீட்டின் பின்புறமுள்ள ஆற்றில் குளிக்கப் போவதாக தனது மனைவியிடம் கூறியிருந்தார்.

ஆனால் பல மணி நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி காவல்துறை மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் அளித்தார்.

அவர் ஆற்றில் மூழ்கி இறந்ததாக பலர் நினைத்தனர்.

தன்னார்வலர்கள் ஆற்றில் இறங்கி தேடியும் திரு.யூனுஸைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னர் அவரது சட்டை கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து ஒரு மைல் தொலைவில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

ஆனால் அங்கு அவரின் பாதி உடல் மட்டுமே கண்டெடுக்கப்பட்டது.

முதலை அவரை கடித்து கொன்றது.

யூனுசின் மேல் உடல் முதலையால் உண்ணப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

ஆற்றில் முதலை இருப்பதை அறியாத அவர் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் உள்ளோர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.