பொன்னமராவதி மின்சார வாரிய அலுவலகத்திற்கு அருகே கழிவு நீர் கால்வாய்க்குள் விழுந்த மாடு!!

பொன்னமராவதி மின்சார வாரிய அலுவலகத்திற்கு அருகே கழிவு நீர் கால்வாய்க்குள் விழுந்த மாடு!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மின்சார வாரிய அலுவலகத்திற்கு அருகே கழிவு நீர் கால்வாய் உள்ளது. இதில் வலையபட்டியைச் சேர்ந்த காத்தான் என்பவருக்கு சொந்தமான பசு மாடு ஒன்று மேய்ச்சலின் போது குழிக்குள் தவறிவிழுந்தது. தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொன்னமராவதி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் கால்வாயில் விழுந்த பசு மாட்டை கயிறு மூலம் கட்டி உயிருடன் மீட்டு மாட்டின் உரிமையாளர் காத்தனிடம் ஒப்படைத்தனர்.