சிங்கப்பூரில் சுமார் 45 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ள நிறுவனம்!!

45 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதாக SingPost நிறுவனம் அறிவித்துள்ளது.
மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் நிறுவன ஆதரவு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்று SingPost நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.
மேலும் ஒரு சிலர் அனைத்துலக வர்த்தகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கூறினார்.
ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் முடிவு எளிதான ஒன்றல்ல என்று அந்நிறுவனம் கூறியது.
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நிறுவனத்திற்குள் மாற்று வேலைகளை வழங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அது கூறியது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan