`வேட்டையன்’ படத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!!

சுமார் ₹160 கோடி பட்ஜெட்டில் ரஜினி நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்தது.இப்படம் TJ ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ளது.

இப்படத்தில் ரஜினிகாந்த்,அமிதாப் பச்சன்,மஞ்சு வாரியர்,பகத் பாசில் என பலர் நடித்துள்ளனர்.ரஜினி ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இப்படத்தைக் காண ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில் ட்ரைலர் அக்டோபர் 2-ஆம் தேதி வெளியானது. ட்ரைலர் வெளியான பிறகு விமர்சனங்களும் எழத் தொடங்கி விட்டது.

இப்படம் என்கவுண்டர் பத்தி பேசும் படம் என்பது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என பழனிவேல் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு அக்டோபர் 3-ஆம் தேதி(நேற்று) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இப்படத்தில் என்கவுண்டர் சம்பந்தப்பட்ட வசனங்களை நீக்க வேண்டும் என அவர் தாக்கல் செய்த மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

வேட்டையன் படத்திற்கு இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

மேலும் லைகா நிறுவனம்,சென்சார் போர்டு விளக்கம் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.நீதிபதி இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.