சரக்கு கப்பலும்,மீன் பிடி கப்பலும் மோதி விபத்து!! காணாமல் போன 8 பேரை தேடும் பணி தீவிரம்!!

சரக்கு கப்பலும்,மீன் பிடி கப்பலும் மோதி விபத்து!! காணாமல் போன 8 பேரை தேடும் பணி தீவிரம்!!

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் இருந்து வந்த சரக்கு கப்பலுடன், சீன மீன்பிடி படகு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவம் ஏப்ரல் 3ஆம் தேதி அன்று ஹைனான் தீவு மாகாணத்தில் உள்ள ஒரு நகரத்திற்கு அருகே நடந்தது.

இந்த விபத்தில் 8 பேர் காணாமல் போனதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

காணாமல் போனவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினர்.