சிங்கப்பூரில் 62 வயதான பெண் ஓட்டிச் சென்ற கார் கால்வாயில் விழுந்தது!!

சிங்கப்பூரில் 62 வயதான பெண் ஓட்டிச் சென்ற கார் கால்வாயில் விழுந்தது!!

சிங்கப்பூரின் புக்கிட் பாடோக்கில், 62 வயதான பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற கார் கால்வாயில் தவறி விழுந்தது.

இந்த சம்பவம் மார்ச் 6ஆம் தேதியன்று நடந்தது.

இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு சுமார் 3.30 மணியளவில் தகவல் அளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.