எகிப்தில் பல்கலைக்கழக மாணவர்கள் பயணம் செய்த பேருந்து விபத்து!! 12 பேர் பலி!!

எகிப்தில் பல்கலைக்கழக மாணவர்கள் பயணம் செய்த பேருந்து விபத்து!! 12 பேர் பலி!!

எகிப்தில் பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர்.

மேலும் இந்த விபத்தில் 33 பேர் காயமடைந்துள்ளனர்.

கலால பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகள் முடிந்து புதிய கலால அதிவேக நெடுஞ்சாலை வழியாக தங்களுடைய விடுதிக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது.

பஸ் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்துக்கான காரணம் குறித்த தகவல் வெளிவரவில்லை.

விபத்து நடந்த இடத்திற்கு 28 ஆம்புலன்ஸ்கள் சென்றதாகவும் அங்கு காயமடைந்தவர்களை சூயஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் காலித் அப்தல் கஃபார் மற்றும் கல்வி அமைச்சர் அய்மான் அஷோர் விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

எகிப்தில் மோசமான போக்குவரத்து பாதுகாப்பு பதிவால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

வாகனங்களில் வேகமாக செல்வது, மோசமான சாலை பராமரிப்பு மற்றும் போக்குவரத்து விதிகளின் மோசமான அமலாக்கம் போன்றவை விபத்து ஏற்பட காரணமாக உள்ளது.