தென்கொரியாவின் தெற்கு கடற்கரையில் படகு கவிழ்ந்து விபத்து!!

தென்கொரியாவின் தெற்கு கடற்கரையில் படகு கவிழ்ந்து விபத்து!!

தென்கொரியாவின் தெற்கு கடற்கரையில் 9 பணியாளர்களை ஏற்றிச் சென்ற மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்தது.

இந்த துயரச் சம்பவம் மார்ச் 9ஆம் தேதியன்று நடந்தது.

படகு கவிழ்ந்ததில் ஆறு பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் மீட்கப்பட்ட மூன்று பணியாளர்களும் சுயநினைவின்றி இருப்பதாக அவர்கள் கூறினர்.

காணாமல் போனவர்களை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.