விரைவுச்சாலையில் லாரி மீது பைக் மோதி விபத்து!! சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பைக் டிரைவர்!!

விரைவுச்சாலையில் லாரி மீது பைக் மோதி விபத்து!! சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பைக் டிரைவர்!!

சிங்கப்பூரின் அயர் ராஜா விரைவுச்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவம் மார்ச் 27ஆம் தேதி அன்று நடந்தது.

இந்த விபத்து குறித்து மாலை 5.40 மணியளவில் காவல்துறையினர் மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்தில் காயம் அடைந்த 30 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து 27 வயதான லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.