17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பார் உரிமையாளர்!!

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பார் உரிமையாளர்!!

சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியாவில் ராஜ்குமார் பாலா(41) என்பவர் மதுக்கூடம் நடத்தி வந்தார். அவரிடம் வேலை பார்த்த 17 வயதுடைய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.அவருடைய குற்றம் நிரூபனமானது.

அவர் மீது மூன்று குற்றங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. பாலியல் வன்முறை, பெண்ணின் மானத்திற்க்கு பங்கம் ஏற்படுத்தியது, சட்டவிரோதமாக தங்க இடம் கொடுத்தது போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் 2020, பிப்ரவரி 21 ஆம் தேதி நடந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அந்த பெண் சிங்கப்பூர் பராமரிப்பு இல்லத்தில் இருந்து தப்பித்து சென்று ராஜ்குமாரிடம் சட்டத்திற்கு புறம்பாக வேலைப்பார்த்தார், மேலும் மூன்று பெண்கள் அவரிடம் வேலை பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அவர்கள் மூவரும் சிங்கப்பூர் பராமரிப்பு இல்லத்தில் இருந்து தப்பித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காவல் துறை அதிகாரிகள் பிப்ரவரி 21 ஆம் தேதி ராஜ்குமாரின் மதுகூடத்தை சோதனை இட்ட போது,அந்த பெண்களை அவருடைய வீட்டிற்கு அழைத்து சென்றார்.

வீட்டில் ராஜ்குமார் உட்பட மூன்று பெண்களும் மது அருந்தியுள்ளனர்.அப்போது 17 வயது பெண்ணை ராஜ்குமார் பாலியல் வன்முறை செய்தார். அவர் மதுபோதையில் இருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

அந்த பெண் தன் நண்பரிடம் இரண்டு றினார்.
வாரங்கள் கழித்து தான் பாலியல் வன்முறைக்கு ஆளானதை கூ
அந்த பெண் மீண்டும் சிங்கப்பூர் பராமரிப்பு இல்லத்தில் ஜூலை 20 ஆம் தேதி சேர்க்கப்பட்டார்.

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதை அதிகாரிகளிடம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் அவரை விசாரித்தனர். மேலும் 5 பெண்கள் அவரால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது.அவர் மீது மேலும் 22 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.