சிங்கப்பூரில் காணாமல் போன 55 வயது முதியவர்..!! காரில் சடலமாக மீட்பு…!!

சிங்கப்பூரில் காணாமல் போன 55 வயது முதியவர்..!! காரில் சடலமாக மீட்பு...!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் காரில் சடலமாக மீட்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து பேசிய காவல்துறையினர் ஆகஸ்ட் 9 ஆம் தேதி மாலை 4 மணியளவில் 55 வயது முதியவர் காணாமல் போனதாக புகார் வந்ததாக கூறினர்.

இந்நிலையில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி காணாமல் போனதாகக் கருதப்படும் நபர் சுயநினைவின்றி ஒரு நாள் கழித்து லாவெண்டர் பகுதியில் இறந்து கிடந்தார்.

அவர் ஆகஸ்ட் 10 ஆம் தேதி 861 நார்த் பிரிட்ஜ் ரோட்டில் காரில் மயங்கிய நிலையில் காணப்பட்டார்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மதியம் 1.30 மணியளவில் உதவிக்கான அழைப்பு வந்ததாக கூறியது.

ஆனால் அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக SCDF துணை மருத்துவரால் அறிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்த புகைப்படங்கள் சிங்கப்பூர் சாலை விபத்து என்ற முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் உள்ள புகைப்படத்தில் பல போலீஸ் அதிகாரிகள் கார் பார்க்கிங்கில் இருப்பதைக் காணலாம்.

மேலும் அதிகாரிகளின் அருகே தரையில் ஒரு வெள்ளை பிளாஸ்டிக் தாளில் சுற்றப்பட்ட உடல் காணப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், அவரது இறப்பில் சந்தேகிக்க ஏதும் இல்லை என்று தெரிவித்தனர்.

போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.