முதியவரை தாக்கிய 40 வயது ஆடவர்..!!! நீதிமன்றத்தில் ஆஜர்…!!!

முதியவரை தாக்கிய 40 வயது ஆடவர்..!!! நீதிமன்றத்தில் ஆஜர்...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் முதியவரை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் 40 வயது ஆடவர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கிறார்.

இச்சம்பவம் குறித்து காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இச்சம்பவம் இம்மாதம் ஆகஸ்ட் 3ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு நடந்துள்ளது.

கேலாங் ரோட்டில் இரண்டு நபர்கள் சண்டையிட்டுக் கொள்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதில் 67 வயது முதியவரை 40 வயது ஆடவர் தாக்கியதாக கூறப்படுகிறது.

ஆடவர் தாக்கியதில் காயமடைந்த முதியவர் சுய நினைவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் முதியவர் ஆகஸ்ட் 19 அன்று உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் கைதாகி உள்ளார்.

அவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவிருக்கிறது.

குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் வழங்கப்படலாம்.

Follow us on : click here ⬇️