சுரங்கப்பாதைக்குள் டிப்பர் லாரியை ஓட்டிச் சென்ற 39 வயது ஆடவர் கைது…!!

சுரங்கப்பாதைக்குள் டிப்பர் லாரியை ஓட்டிச் சென்ற 39 வயது ஆடவர் கைது...!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் SLE விரைவுச்சாலைக்குச் செல்லும் மத்திய விரைவுச் சாலையில் டிப்பர் கனரக லாரி ஒன்று விபத்துக்குள்ளானது.

இந்தச் சம்பவத்தில் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் சுரங்கப்பாதை சேதமடைந்துள்ளது.

இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது.

அந்த வீடியோவில் விளக்கு கம்பிகள் மற்றும் கூரையில் இருந்த கம்பிகள் உடைந்து தொங்குவதைக் காணலாம்.

உடைந்த பொருட்களின் சில பகுதிகள் சாலையில் சிதறிக் கிடப்பதை காண முடிகிறது.

இதனால், சாலையின் சில பகுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து ஆகஸ்ட் 25 அன்று நள்ளிரவு 1 மணியளவில் தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் காவல்துறை அதிகாரிகளின் உதவியின்றி 4.5 மீட்டர் உயரமான டிப்பர் லாரியை சுரங்கப்பாதையில் ஓட்டிச் சென்றதற்காக 39 வயதுடைய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.