கடன் மிரட்டல் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 31 வயது ஆடவர் கைது…!!!

கடன் மிரட்டல் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 31 வயது ஆடவர் கைது...!!!

சிங்கப்பூர்:செம்பவாங்கில் கடன்
மிரட்டல் சம்பவங்களில் ஈடுபட்டதாக 31 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 12) நள்ளிரவு செம்பவாங் டிரைவில் உள்ள ஒரு வீட்டில் இச்சம்பவம் நடந்துள்ளது.

பின்பு இச்சம்பவம் குறித்து நள்ளிரவு 12.05 மணியளவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வீட்டின் வாசலில் எச்சரிக்கை விடும் வகையில் சிவப்பு பெயின்ட் பூசப்பட்டது.

போலீசார் கேமராவில் பதிவான காட்சிகள் மற்றும் விசாரணைகள் மூலம் சந்தேக நபரை கைது செய்தனர்.

விசாரணையில் அந்த நபர் ஜூரோங் ஈஸ்ட், 33 தெம்பனீஸ் தெருவில் இதேபோன்று கடன் மிரட்டல் சம்பவங்களில் ஈடுபட்டு இரண்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்று தெரியவந்துள்ளது.

அவர் மீது கடன் வழங்குபவர்கள் சட்டத்தின் கீழ் இன்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

முதல் முறை குற்றவாளிகளுக்கு 5,000 முதல் 50,000 வெள்ளி வரை அபராதம்,5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 6 கசையடிகள் விதிக்கப்படும்.

பொதுமக்கள் கடன் வாங்குபவர்களிடம் இருந்து விலகி இருக்கும்படி காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடன் வழங்கும் நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபடுவது தெரிந்தாலோ அல்லது சந்தேகப்பட்டாலோ,பொதுமக்கள் காவல்துறையை ‘999’ என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.