மெல்போர்னில் ஒரே இரவில் நான்கு பேரை கத்தியால் கொடூரமாக தாக்கிய 31 வயதுடைய நபர்!!

மெல்போர்னில் ஒரே இரவில் நான்கு பேரை கத்தியால் கொடூரமாக தாக்கிய 31 வயதுடைய நபர்!!

ஆஸ்திரேலிய நகரமான மெல்போர்னில் ஒரே இரவில் ஒரு பெண் உட்பட நான்கு பேரை கத்தியால் குத்திய 31 வயதான நபரை காவல்துறை கைது செய்தது.

அந்த நபர் வைத்திருந்த பை ஒன்றில் ஆயுதங்கள் இருந்ததாகவும், அதை கைப்பற்றியதாகவும் காவல்துறை கூறியது.

அந்த நபர் மீது 14 தாக்குதல் குற்றங்கள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட ஆயுதம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இச்சம்பவம் ஜனவரி 6ஆம் தேதி இரவு 10 மணி முதல் ஜனவரி 7ஆம் தேதி நள்ளிரவு 12:30 மணிக்குள் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த தாக்குதலுக்கான காரணங்கள் தெரியவில்லை என்று காவல்துறையினர் கூறினர்.

 

மேலும் இது பயங்கரவாத தாக்குதல் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

 

பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

பாதிக்கப்பட்டவர்களில் 31 வயது பெண்ணுக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

மேலும் குற்றவாளிக்கு மனநலப் பிரச்சனைகள் இருப்பதாக அவர்கள் கூறினர்.