Latest Singapore News

கடைக்குள் புகுந்து தைரியமாக கொள்ளையடித்த 29 வயது ஆணும்,25 வயது பெண்ணும்!

பொங்கோல் சென்ட்ரலில் உள்ள கடை ஒன்றில் ஜூன் 29-ஆம் தேதி கடைக்குள் புகுந்து ஓர் ஆணும், பெண்ணும் கொள்ளையடித்தாக புகார் வந்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை விசாரணையை நடத்தினர்.

கொள்ளைச் சம்பவத்தில் 11 வெள்ளி பணமும்,சில தனிப்பட்ட பொருட்களும் திருடப்பட்டுள்ளதாக தெரிய வந்தது.

காவல்துறையின் கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டது.

அவர்களை அங் மோ கியோ காவல்துறைப் பிரிவு கொள்ளையடித்தவர்களின் அடையாளங்களைக் கண்டறிந்தனர்.

அவர்களை நேற்று (ஜூலை 5) காவல்துறை கைது செய்தது.

29 வயதுடைய ஆணும்,25 வயதுடைய பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.

இன்று (ஜூலை 6) நீதிமன்றத்தில் அவர்கள்மீது குற்றம்சாட்டப்படும்.அவர்கள் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை அபராதமும் விதிக்கப்படும்.