தனது வங்கி கணக்கை வேறொருவரிடம் ஒப்படைத்து மோசடிகாரர்களுக்கு துணை புரிந்த 27 வயது இளைஞன்!!

தனது வங்கி கணக்கை வேறொருவரிடம் ஒப்படைத்து மோசடிகாரர்களுக்கு துணை புரிந்த 27 வயது இளைஞன்!!

சிங்கப்பூரில் 27 வயதுடைய நபர் மீது மோசடிக்காரர்களுக்கு ஒத்துழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்த நபர் தனது வங்கிக் கணக்கின் கட்டுப்பாட்டை வேறொருவரிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

அதற்காக அவர் $23,020 சிங்கப்பூர் டாலர் பெற்றுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதோடு மட்டுமல்லாமல் வேறொரு நபரின் வங்கிக் கணக்கை பயன்படுத்தி குறைந்தபட்சம் $8,980 பணத்தை எடுத்து சிங்கப்பூரில் உள்ள மற்றவர்களிடம் கொடுத்துள்ளார் என்று அவர்கள் கூறினர்.

அவர் மீது பண மோசடி தொடர்பான பல்வேறு குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, $150,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.