அதிகாரிகளின் உத்தரவைமீறி காரை ஓட்டிய 25 வயதுடைய நபர்….. மடக்கி பிடித்த சிங்கப்பூர் காவல்துறை…..

சிங்கப்பூரில் Whitley ரோடு சாலை தடுப்பில் 25-வயதுடைய ஓட்டுநரிடம் காரை நிறுத்தும்படி சிங்கப்பூர் போக்குவரத்து காவல்துறை கட்டளையிட்டது.

ஆனால், அந்த நபர் அதிகாரிகளின் உத்தரவை மதிக்காமல் காரை வேகமாக ஓட்டி சென்றார்.

அவரை அதிகாரிகள் பின் தொடர்ந்தனர்.5 காவல்துறை பைக்குகளும், ஒரு காரும் அவரை பின் தொடர்ந்து சென்றது.

அதிகாரிகள் அவரை மடக்கி பிடித்தனர். அவர் கைது செய்யப்பட்டார்.

காரை மதுபோதையில் ஓட்டியதாக சந்தேகிக்கப்படுகிறார்.

இச்சம்பவம் தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.