சிங்கப்பூரில் சந்தேகத்தின் அடிப்படையில் 22 வயதுடைய நபர் கைது!

சிங்கப்பூரில் சந்தேகத்தின் அடிப்படையில் 22 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.மீடியாகார்ப் Meconnect கணக்குகளை ஊடுருவியதாக சந்தேகப்படுகிறார்.

சுமார் 14,000 கணக்குகள் ஊடுருவப்பட்டன. ஆடவரின் அடையாளத்தை விசாரணையின் மூலம் குற்றப்புலனாய்வு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கண்டறிந்தனர்.

மார்ச் 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

கடந்த மாதம் பாதிக்கப்பட்ட 14000 பயனீட்டாளர்களிடம் அவர்களின் Password யை மாற்றும் படி நிறுவனம் கேட்டுக்கொண்டது.

தற்போது வரை பயனீட்டாளர்களின் தனிநபர் தகவல்கள் வெளியிடப்பட்டதற்கோ அல்லது தவறான முறையில் பயன்படுத்தப்பட்டத்திற்கோ ஆதாரம் இல்லை.

கைது செய்யப்பட்டவரின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது 5 ஆயிரம் வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.அல்லது இவ்விரண்டும் விதிக்கப்படலாம்.