கிட்டத்தட்ட 41 நாட்களாக காணாமல் போன 21 வயது ராணுவ வீரர் மீட்பு!!

கிட்டத்தட்ட 41 நாட்களாக காணாமல் போன 21 வயது ராணுவ வீரர் மீட்பு!!

மெலகாவில் 21 வயதுடைய ராணுவ வீரர் ஜூன் 24-ஆம் தேதி முதல் 41 நாட்களாக காணவில்லை என புகார் அளிக்கபட்டது.

அவர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி இரவு 7 மணி அளவில் செமாபோக்கில் உள்ள உணவகத்தில் பத்திரமாக மீட்கப்பட்டதாக melaka tengah OCPD உதவி ஆணையர் கிறிஸ்டோபர் பாடிட் கூறினார்.

ராணுவ வீரரின் தந்தை செய்தியாளர்களிடம் கூறுகையில் காணாமல் போனவர் தனது மூன்று குழந்தைகளில் நடுத்தர குழந்தை என்றார். அவரை அழைத்து செல்ல வந்த மூத்த சகோதரனைக் கண்டதும் அழத் தொடங்கியதாக கூறினார்.

மேலும் அவர் மகனுக்கு தனிப்பட்ட பிரச்சினை எதுவும் இல்லை என்று கூறினார்.

அவர் கொடுமை படுத்தபடவில்லை என்றும் கூறினார்.

தனது மகன் தாய்லாந்து எல்லைக்கு அருகே பணியில் இருந்து திரும்பி வந்த பிறகு தனது மகன் விநோதமாக நடந்து கொள்வதாக கூறினார்.

தனது மகன் இரண்டு வருடங்களுக்கு மேலாக ஆயுதப்படையில் பணிபுரிந்து வருவதாக கூறினார்.

அவரைத் தேடி கண்டுபிடித்து கொடுத்தவர்களுக்கு நன்றியை தெரிவித்தார்.

விடுமுறை நாட்களுக்காக வீட்டிற்கு வந்த அந்த ராணுவ வீரர் விடுமுறை நாட்கள் முடிந்த பிறகு பணிக்கு திரும்ப வேண்டியிருந்தது.

தஞ்சோங் கிளிங் வீட்டிலிருந்து ஜூன் 24-ஆம் தேதி சுமார் 8.10 மணியளவில் தனது பைக்கில் வெளியே சென்ற அவர் நெடுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.அவர் காணாமல் போனது குறித்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது.