மதுபோதையில் காரை ஓட்டி வேன் மீது மோதி விபத்து ஏற்படுத்திய 19 வயது இளைஞர்!!

மதுபோதையில் காரை ஓட்டி வேன் மீது மோதி விபத்து ஏற்படுத்திய 19 வயது இளைஞர்!!

சிங்கப்பூரில் தெம்பனிஸ் விரைவுச் சாலையில் நேற்று(ஜூன் 30) அதிகாலை வேன் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது தெரிய வந்துள்ளது.

விபத்தில் சிக்கிய அந்த இளைஞர்,வேன் டிரைவர் மற்றும் அதில் பயணித்த பயணி ஆகியோரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த விபத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. கருப்பு நிற வேன் ஒன்றின் பின்னால் ஒரு கார் மோதுவதை அதில் காணலாம்.

கார் மோதிய வேகத்தில் வேன், கார் இரண்டுமே கடுமையான சேதம் அடைந்தன. சாலையில் கார் தலைக் குப்பற கவிழ்ந்து கிடந்த காட்சியையும் வீடியோவில் காணலாம்.

இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.