Latest Tamil News Online

சிங்கப்பூரில் பணி பெண்களுக்கு பற்றாக்குறை!சிங்கப்பூரில் ஏன்?பணிபெண்களுக்கு பற்றாக்குறை!

பிலிப்பைன்ஸ் மனிலா விமானநிலையத்தில் ஏற்பட்டுள்ள மின்சார தடையால் சுற்றுலா பயணிகளை மட்டும் பாதிக்கவில்லை. இங்கு உள்ள பலரையும் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேட வைத்துள்ளது. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பிலிப்பைன்ஸ் பணி பெண்கள் மாட்டி கொண்டுள்ளனர். அவர்களை நம்பி இருக்கும் பலர் வீட்டு வேலையைப் பார்க்க ஆட்கள் தேடுகின்றனர்.தனது நிறுவனத்தின் சேவை 10 விழுக்காடாக அதிகரித்துள்ளது என சுத்தம் செய்யும் நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. சேவைகள் தேவையென்று விவரம் கேட்கும் நிறுவோர்களின் எண்ணிக்கை 60 விழுக்காடாக அதிகரித்துள்ளதாக என மற்றொரு நிறுவனம் கூறியுள்ளது. அடுத்த வாரம் முழுவதும் வீட்டு வேலைக்காக சிலர் பணி பெண்களை முன்பதிவு செய்துள்ளதாக வேறொரு நிறுவனம் கூறியது.