சிங்கப்பூரில் கடலில் காணாமல் போனவர்!! சடலமாக மீட்பு!!

சிங்கப்பூரில் கடலில் காணாமல் போனவர்!! சடலமாக மீட்பு!!

சிங்கப்பூரில், பிப்ரவரி 9ஆம் தேதி அன்று மீன்பிடிக்கச் சென்ற 57 வயது நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

அன்று மாலை 4:15 மணியளவில் அந்த நபர் காணாமல் போனதாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதனை அடுத்து சிங்கப்பூரின் கடல் மற்றும் துறைமுக ஆணையத்தின் ரோந்துக் கப்பல் மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மீட்புக் கப்பல் ஆகியவை தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

24 மணி நேரத்திற்கும் மேலாக தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிப்ரவரி 10ஆம் தேதி அன்று சாங்கி பாயிண்ட் ஃபெர்ரி டெர்மினலுக்கு அப்பால் அந்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.

மேலும் அந்த நபரின் மரணம் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.