சிங்கப்பூரில் பக்கத்து வீட்டு பெண்ணை கத்தியால் கொலை செய்த நபர்!! ரிமாண்ட் நீட்டிப்பு!!

சிங்கப்பூரில் பக்கத்து வீட்டு பெண்ணை கத்தியால் கொலை செய்த நபர்!! ரிமாண்ட் நீட்டிப்பு!!

சிங்கப்பூரின் புக்கிட் பாடோக் குடியிருப்பு பகுதியில் தனது பக்கத்து வீட்டாரான 43 வயது பெண்ணை, 65 வயது முதியவர் கத்தியால் குத்திக் கொன்றார்.

இச்சம்பவம் ஜனவரி 6ஆம் தேதியன்று நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு காலை 8:20 மணிக்கு அழைப்பு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

அந்த பெண், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப்படை துணை மருத்துவர்கள் அறிவித்தனர்.

அந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கொலைக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் கத்தியையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் ஐந்து வயது மகனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

குற்றவாளி, மேலும் 4 வாரங்களுக்கு சிறை வளாக மருத்துவ மையத்தில் உளவியல் மதிப்பீட்டிற்காக காவலில் வைக்கப்படுவார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு மார்ச் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.