சிங்கப்பூரில் கடந்த சில வாரங்களாக நடக்கும் சாலை விபத்துகள்!! மீண்டும் ஓர் கோர விபத்து!! தப்பி ஓடிய கார் டிரைவர்!!

சிங்கப்பூரில் கடந்த சில வாரங்களாக நடக்கும் சாலை விபத்துகள்!! மீண்டும் ஓர் கோர விபத்து!! தப்பி ஓடிய கார் டிரைவர்!!

சிங்கப்பூரின் புக்கிட் திமா எக்ஸ்பிரஸ்வேயில், கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 22 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று குடிமைத் தற்காப்புப் படை துணை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பிப்ரவரி 6ஆம் தேதி அன்று நள்ளிரவு நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து நள்ளிரவு 1.20 மணியளவில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த 23 வயது பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கார் டிரைவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினார் .

பாதிக்கப்பட்டவர்கள் இருவரும் ஜோகூர் பாருவிற்கு சென்று கொண்டிருந்தபோது இந்த துயரச் சம்பவம் நேர்ந்தது.

இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணையை மேற்கொண்டது.தப்பி ஓடிய டிரைவரை காவல்துறை கண்டுபிடித்தது .27 வயதுடைய புவா யுய் லூன் என்பவர் விபத்தை ஏற்படுத்திவிட்டு காயமடைந்தவர்களுக்கு உதவாமல் அங்கிருந்து மலேசியாவிற்கு தப்பி சென்றுள்ளார் என்று தெரிவித்தது.

அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விபத்து குறித்து 24 மணி நேரத்துக்குள் காவல்துறையிடம் தெரிவிக்க தவறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றத்தில் வரும் பிப்ரவரி 16-ஆம் தேதி மீண்டும் ஆஜர்ப்படுத்தபடுவார்.