தனது கண்காணிப்பில் விடப்பட்ட சிறுமியிடம் அத்துமீறிய முதியவர்!!

தனது கண்காணிப்பில் விடப்பட்ட சிறுமியிடம் அத்துமீறிய முதியவர்!!

சிங்கப்பூரில் தனது கண்காணிப்பில் விடப்பட்ட பேத்தியை, 61 வயதான நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்.

இச்சம்பவம் 2016 ஆம் ஆண்டு நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளியான அந்த நபர், 2023ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

மேலும் அந்த நபர் சிறுமியை மிரட்டியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிப்ரவரி 6ஆம் தேதி அன்று அந்த நபருக்கு, 3 வருடம் 6 மாதங்கள் சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.

பொதுவாக 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது பிரம்படி வழங்கப்படலாம்.

ஆனால் இந்த வழக்கில் குற்றவாளி 61 வயதான நபர் என்பதால் அவருக்கு பிரம்படி தண்டனை தீர்ப்பளிக்க முடியாது..