சிங்கப்பூரில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல்!! கைதான 21 , 24 வயது இளைஞர்கள்!!

சிங்கப்பூரில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல்!! கைதான 21 , 24 வயது இளைஞர்கள்!!

சிங்கப்பூரில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை வைத்திருந்த 21 மற்றும் 24 வயதுடைய சிங்கப்பூரர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து மொத்தம் 4420 கார்டன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அவற்றின் வரி மற்றும் சேவை மற்றும் சரக்கு வரி மொத்தம் $542,959 என்று அவர்கள் கூறினர்.

வரி செலுத்தப்படாத பொருட்களை வாங்குவது, விற்பது மற்றும் வைத்திருப்பது சட்டப்படி குற்றம் ஆகும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் இருவருக்கும் 40 மடங்கு வரி அபராதம் விதிக்கப்படலாம் .6 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இவ்விரண்டுமே தீர்ப்பளிக்கப்படலாம்.