கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு!! மண்ணில் புதைந்த பேருந்துகள்!!

கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு!! மண்ணில் புதைந்த பேருந்துகள்!!

தெற்கு பிலிப்பைன்ஸில் பல நாட்களாக பெய்த மழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் இரண்டு பேருந்துகள் புதைந்ததில், 11 பேர் காயம் அடைந்தனர்.

அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பிப்ரவரி 6ஆம் தேதி அன்று மாலை நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தங்கச் சுரங்கத்திற்கு வெளியே ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பேருந்துகளில் எத்தனை தொழிலாளர்கள் இருந்தார்கள் என்பது குறித்த தகவல் தெளிவாகத் தெரியவில்லை என்று அவர்கள் கூறினர்.