பொன்னமராவதி அருகே ஊரணிக்குள் டிராக்டர் கவிழ்ந்து விபத்து!! சம்பவ இடத்திலேயே உயிரிழந்த கல்லூரி மாணவர்!!

பொன்னமராவதி அருகே ஊரணிக்குள் டிராக்டர் கவிழ்ந்து விபத்து!! சம்பவ இடத்திலேயே உயிரிழந்த கல்லூரி மாணவர்!!

பொன்னமராவதி, பிப்.4-
பொன்னமராவதி அருகே வார்பட்டியில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து-லோகநாதன் என்ற கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பலி.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வார்பட்டி பிச்சங்காலப்பட்டியை சேர்ந்தவர் லோகநாதன்(22) .கல்லூரி மாணவரான இவர் தனது வயலில் இருந்த கடலை கொடியை ஏற்றுவதற்காக டிராக்டரை எடுத்துச் சென்றுள்ளார். அப்பொழுது மணியாரம் குளம் என்ற குடிநீர் ஊரணி அருகே வந்த பொழுது எதிர்பாராத விதமாக ஊரணிக்குள் டிராக்டர் கவிழ்ந்தது.

இதில் டிராக்டரின் சக்கரத்ததின்  இடையே சிக்கிய லோகநாதன் சம்பவ இடத்திலேயே பலியானார். இறந்த லோகநாதன் உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னமராவதி அரசு பாப்பாயி ஆச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஆறு பெண் குழந்தைகளுக்குப் பிறகு பிறந்த ஒரே ஆண் குழந்தையான லோகநாதன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.