சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் உட்பட 7 பேர் கைது!!

சிங்கப்பூரில் ஆன்லைனில் நடத்தப்படும் சட்டவிரோத சிகரெட் வியாபாரத்திற்கு எதிராக சோதனை நடத்தப்பட்டது.இந்த சோதனையில், 42 வயதான சீன நாட்டைச் சேர்ந்த டிரைவர் உட்பட ஏழு பேரை சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்

மேலும் 83 அட்டைப் பெட்டிகளில் கடத்தப்பட்ட சிகரெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.அதோடு மட்டுமல்லாமல் சுங்கவரி செலுத்தப்படாத 6 மதுபாட்டில்களையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.

குற்றவாளிகளுக்கு அபராதம் மற்றும் 6 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.