விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட விஷ தவளைகள்!!

விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட விஷ தவளைகள்!!

கொலம்பியாவின் தலைநகரமான பொகோட்டா விமான நிலையத்தில் 130 விஷத் தவளைகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.

அந்த தவளைகளை வைத்திருந்த பெண்ணை அவர்கள் கைது செய்தனர்.

5 சென்டிமீட்டருக்கும் குறைவான அளவுடைய மற்றும் மிகவும் விஷத்தன்மை வாய்ந்த இந்த ஹார்லெக்வின் தவளைகள் அழிந்து வரும் இனங்களில் ஒன்றாகும்.

சர்வதேச சந்தையில் இவற்றின் விலை, தவளை ஒன்றிற்கு தலா US$1000 என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.