போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை நடத்திய அதிரடி சோதனை!! சிக்கிய பல மதிப்பிலான போதைப்பொருட்கள்!!

போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை நடத்திய அதிரடி சோதனை!! சிக்கிய பல மதிப்பிலான போதைப்பொருட்கள்!!

மலேசியாவில், ஜோகூர் மற்றும் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையினர் இரண்டு நாட்கள் சோதனை நடத்தினர்.

இந்த அதிரடி சோதனையில் S$852,000 மதிப்பிலான போதைப்பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

மேலும் இந்த கடத்தலுக்கு தொடர்புடைய 8 பேரை அவர்கள் கைது செய்தனர்.

அதோடு மட்டுமல்லாமல், 8 கார்கள், 12 மோட்டார் சைக்கிள்கள், தங்கம், நகைகள், பணம் ஆகியவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

போதைப்பொருள் உட்பட அனைத்து பொருட்களின் மொத்த மதிப்பு 4.52 மில்லியன் ரிங்கிட் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.