பொன்னமராவதி வட்டார வள மையத்திற்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் கல்லூரி களப்பயணம்!!

பொன்னமராவதி வட்டார வள மையத்திற்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் கல்லூரி களப்பயணம்!!

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி , பொன்னமராவதி வட்டார வள மையத்திற்குட்பட்ட எட்டு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்கள் 289 பேருக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் கல்லூரி களப்பயணமாக கணேசர் கலை அறிவியல் கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டனர்.

கல்லூரியின் முதல்வர் திரு. பழனியப்பர் தலைமை தாங்கினார்.அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.மலைச்சாமி மற்றும் வட்டாரவளமைய மேற்பார்வையாளர் (பொ) திரு.சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.

அரசு உயர் நிலைப்பள்ளி கருப்புக்குடிப்பட்டி தமிழ் பட்டதாரி ஆசிரியர் திரு.முருகேசன் மாணவர்களின் எதிர்காலத்திற்கு கல்வியின் அவசியத்தைக்கூறி வாழ்த்துறை வழங்கினார்.

ஒவ்வொரு துறை பேராசிரியர்களும் தங்களது துறையின் சிறப்பம்சங்கள் மற்றும் கல்லூரியின் கட்டமைப்பு & வசதிகள் பற்றி எடுத்துக்கூறினர்.

மாணவர்கள் கல்லூரியின் வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகம், கட்டமைப்பு போன்றவற்றை பார்வையிட்டனர்.

கலந்துகொண்ட அனைவருக்கும் தேநீர், சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் பொறுப்பாசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.