செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் 52 வயதுடைய நபர் கைது!!

செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் 52 வயதுடைய நபர் கைது!!

ஜனவரி 28ஆம் தேதியன்று வாடிகனில், செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது கத்தி வைத்திருந்த 51 வயதான நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் அந்த நபர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் என்று அவர்கள் கூறினர்.

அந்த நபரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்யும் முயற்சியில், அதிகாரி ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என ANSA தெரிவித்துள்ளது.

மேலும் இச்சம்பவத்திற்கும் தீவிரவாதத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அவர்கள் கூறினர்.