வாகனம் சறுக்கி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நபர்!!

வாகனம் சறுக்கி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நபர்!!

சிங்கப்பூரில் துவாஸ் சவுத் அவென்யூ 3 இல் நடந்த விபத்தில் 51 வயதான நபர் ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் ஜனவரி 24ஆம் தேதியன்று காலை நடந்தது.

இந்த விபத்து குறித்து காலை 7:45 மணியளவில் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அந்த நபர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வண்டி சறுக்கி கீழே விழுந்தது.

இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக குடிமைத் தற்காப்புப் படை துணை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து விசாரணைகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.