ஆறாத வடு!! கொத்தாக 77 க்கும் மேற்பட்டோரை கொன்ற தீ!! திடுக்கிட வைத்த குற்றவாளியின் வாக்குமூலம்!!

தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பர்க் நகரத்தில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது.இது கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி அதிகாலை நேர்ந்தது.

குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர் கழுத்தை நெரித்து ஒருவரை கொன்று ஐந்து மாடி கட்டிடத்தின் அடித்தளத்தில் மறைக்க முயன்றுள்ளார். அப்போது உடலை தீ வைத்து எரிக்க திட்டமிட்டார். சடலத்தின்மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். தீயானது கட்டிடத்திலும் பரவ தொடங்கியது.

கட்டிடத்தில் இருந்த சுமார் 76 பேர் இந்த தீயிக்கு இரையாகினர். டஜன் கணக்கானோர் காயமடைந்தனர்.

இந்த கோர விபத்துக்கு காரணமான 29 வயதான நபரை காவல்துறை கைது செய்தது.

மேலும் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த நபர் மீது 76 கொலை குற்றச்சாட்டுகள் மற்றும் 82 கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சமீபத்திய ஆண்டுகளில் உலகளவில் ஏற்பட்ட மிக மோசமான கட்டிட தீ விபத்துகளில் இதுவும் ஒன்றாகும்.