எரிவாயு ஏற்றி சென்ற வாகனம் காருடன் மோதி பயங்கர வெடி விபத்து!!

எரிவாயு ஏற்றி சென்ற வாகனம் காருடன் மோதி பயங்கர வெடி விபத்து!!

மங்கோலியாவின் தலைநகரில் ஜனவரி 24ஆம் தேதி அன்று எரிவாயுவை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று, காருடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் எரிவாயு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் குழந்தைகள் உட்பட 14 பேர் காயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

விபத்து நடந்த இடத்திற்கு அருகில் உள்ள குடியிருப்பாளர்கள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.