விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய மூன்று பேர்!! தேடி வரும் சிங்கப்பூர் காவல்துறை!!

விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய மூன்று பேர்!! தேடி வரும் சிங்கப்பூர் காவல்துறை!!

சிங்கப்பூரின் ஃபாரர் சாலையில் ஒரு கார் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இச்சம்பவம் ஜனவரி 21ஆம் தேதி அன்று இரவு நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து இரவு 10.25 மணியளவில் காவல்துறையினருக்கு அழைப்பு வந்ததாக அவர்கள் கூறினர்.

இந்த விபத்துக்கு காரணமான மூன்று பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மற்றொரு காரில் இருந்த 61 வயது நபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இச்சம்பவம் குறித்து விசாரணைகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.