சிங்கப்பூரில் கட்டுமான தளத்தில் விபத்து!!

சிங்கப்பூரில் கட்டுமான தளத்தில் விபத்து!!

சிங்கப்பூரின் பாசிர் ரிஸ் ஈஸ்ட் ரயில் நிலையத்தின் கட்டுமான தளத்தில் இரைச்சல் தடுப்பு பேனல் ஒன்று சேதமடைந்தது.

கனரக உபகரணம் இரைச்சல் தடுப்பு பேனல் மீது சரிந்து விழுந்ததால், அது சேதம் அடைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் ஜனவரி 16ஆம் தேதி அன்று நடந்ததாக கூறப்படுகிறது.

கட்டுமான தளத்திலிருந்த தொழிலாளர்கள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

மேலும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்று அது கூறியது.

இச்சம்பவம் குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.