சிங்கப்பூரில் தன்னை தானே கத்தியால் குத்தி கொண்ட 67 வயதுடைய நபர்!!

சிங்கப்பூரில் தன்னை தானே கத்தியால் குத்தி கொண்ட 67 வயதுடைய நபர்!!

ஜனவரி 15ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் உள்ள சன் ப்ளாசாவில் 67 வயதான நபர் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் மயங்கி கிடந்தார்.

காயமடைந்த அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மதியம் 2.05 மணியளவில் காவல்துறைக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்தது.
அந்த நபர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடந்து வருவதாக அவர்கள் கூறினர்.