இஸ்ரேலில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கார் விபத்து!!

இஸ்ரேலில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கார் விபத்து!!

மத்திய இஸ்ரேலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் இரண்டு வெவ்வேறு இடங்களில் கார்களைக் கொண்டு மற்ற வாகனங்கள் மீது மோதியதில் ஒரு பெண் உயிரிழந்தார்.

மேலும்  குழந்தைகள் உட்பட 17 பேர் காயம் அடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தீவிரவாத தாக்குதல் ஜனவரி 15ஆம் தேதி அன்று நடந்ததாக அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்கள் இருவரும் சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைந்ததாக அவர்கள் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.