சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்ற பேருந்தில் பயணித்த போது நேர்ந்த விபரீதம்!! பலியான 17 வயதுடைய இந்தியா நாட்டைச் சேர்ந்த இளம்பெண்!!

சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்ற பேருந்தில் பயணித்த போது நேர்ந்த விபரீதம்!! பலியான 17 வயது இந்தியா நாட்டைச் சேர்ந்த இளம்பெண்!!

சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இச்சம்பவம் ஜனவரி 13ஆம் தேதி அன்று அதிகாலை விரைவுச் சாலையில் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

28 பயணிகளை ஏற்றிச் சென்ற அந்தப் பேருந்து விபத்துக்குள்ளானதில் தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் 17 வயது இளம் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் 3 பயணிகள் காயமடைந்தனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் இறந்த அந்த இளம் பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.